தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் விடுதலைப்புலிகள் போர் புரிந்த அளவிற்கு அரசியல் செய்யத் தெரியவில்லை என்று தொடர்ந்து SO CALLED அறிவுசீவிகளால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகக் கடும் போர் சூழலிலும் புலிகள் அரசியல் நகர்வுகளையும் நிலைப்பாடுகளையும் எவ்வாறு மேற்கொண்டார்கள் என்று அறிந்துகொள்ளப் பல்வேறு காலகட்டங்களில் அவர்களால் வெளியிடப்பட்ட அரசியல் ஆவணங்கள் இப்புத்தகத்தில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறது. தொலைநோக்கு பார்வை கொண்ட கொள்கை உறுதி கொண்ட, மிகுந்த அரசியல் தெளிவுடன் கூடிய செயல்பாடுகளால் தான் புலிகள் 30 வருடங்கள் பல நாடுகளுக்கு எதிராகத் தங்களின் வீரம் சொறிந்த போராட்டத்தை மேற்கொண்டார்கள் என்பதை இப்புத்தகம் படிப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம்.