Pulithevan - முதல் தமிழ்வீரன் பூலித்தேவன்
முதல் தமிழ்வீரன் பூலித்தேவன்
கட்டபொம்மன் பூலித்தேவன் என்ற இரு சரித்திர நாயகர்களையும் சீர்தூக்கிப் பார்த்தோமானால் பூலித்தேவன் புகழ் பன்மடங்கு உயர்ந்தது; தூய்மையானது; புகழ்மிக்கது என்பது நன்கு விளங்கும். பாரதியாரின் மறவன் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் இந்த வீர மறவன் பூலித்தேவனும் இவன் தலைமையின்கீழ்ப் போராடிய ஆயிரமாயிரம் பெருமக்களுமே நம் மறவர் தோன்றுகின்றனர். இந்தப் புத்தகத் தலைப்பு பூலித்தேவன் என்றுதான் விளங்குகிறது. புலித்தேவன் என்று இன்று சிலர் பிழையாகக் கையாள்கின்றனர். நண்பர் துர்க்காதாஸ் எஸ். கே. ஸ்வாமி உண்மையைக் கண்டதும் அதனையே தான் கைக்கொள்ள வேண்டும். என்று கூறி அதன்படியே நூலையும் செவ்வையாக முடித்துத் தந்திருக்கின்றார்கள். அவர்கள் உண்மையான சரித்திரம் நம் நாட்டுக்கு வேண்டும் என்று துடிப்பவர்கள். அவர்கள் முயற்சியைத் தமிழகம் போற்றி வரவேற்கும் என நம்புகின்றேன்.
Author - S.K.Sami
- Pages - 210
Styled With