Naan Nigalthiya Moodhal kolai - நான் நிகழ்த்திய மோதல் கொலை
நான் நிகழ்த்திய மோதல் கொலை
(ஒரு காவலரின் ஒப்புதல் வாக்குமூலம்). 'ரவுடி கொல்லப்பட்டான்; ஆயுதங்கள் கைபற்றப்பற்றப்பட்டன. என்ற தலைப்பில் நிறைய மோதல் மரணங்களை கேள்விப்படுகிறோம். சனநாயக அமைப்பினுள் சட்டத்திற்கு புறம்பாக நிகழும் செயல் எதுவாயினும், நிகழ்த்துவது யாராயினும் குற்றம் தான். நம் நாட்டில் காவல் துறையால் கொலை செய்யப்படும் ஒரு மனிதனுக்கு தீவிரவாதி என்றோ நக்சலைட் என்றோ, பிரபல ரவுடியென்றோ திட்டமிட்டு பெயர்சூட்டி கொலையை நியாயப்படுத்துவது ஒரு நம்பிக்கையாகவே மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இத்தகைய கொலைகளில் ஒன்றைச் செய்ய நேர்ந்த காவலர் ராமசந்திர நாயரின் மனசாட்சி இதை ஏற்க மறுக்கிறது. மனசாட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒரு மாபாதக நிகழ்வுக்குப்பின் மனம் வருந்துவது இயல்பு தான். இங்கே நிகழ்த்தப்பட்ட கொலையில், ராமச்சந்திர நாயரின் மன உறுத்தலுக்கு வெறும் கருணை மட்டும் காரணமல்ல இது, அவரது கொள்கை தொடர்பானது.
Author- குளச்சல் மு. யூசுப் .
- பக்கங்கள் 224
Styled With