Gujarat Padukolaigal - குஜராத் படுகொலைகள்
குஜராத் படுகொலைகள் - நிகழ்த்தியவர்களும், ஆதரித்தவர்களும்
அருந்ததி ராய் :
இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 800 என்றால், சார்பில்லா ஆய்வுகள் 2000-க்கும் மேல் என்றே குறிப்பிடுகின்றன. ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். பெண்கள் துகிலுரியப்பட்டும். கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டும் உள்ளனர். 240 தர்காக்களும், 180 மசூதிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சில அழிக்கப்பட்டுள்ளன.
கபீபா பீபி :
எனது 5 மாதமே ஆன மகன் நதீமை என் கண் முன்னே கொழுந்து விட்டெறிந்த நெருப்பில் தூக்கியெறிந்தனர். எனது மைத்துனர் சபீரை துண்டு துண்டாக வெட்டியதையும் பார்த்தேன். ஆனால் நிகழ்த்தியவர்களும் – ஆதரித்தவர்களும் அவர்களை விட்டுவிட்டு எனது மற்ற மூன்று குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடவேண்டிய நிலையில் இருந்தேன். ஆனால் அந்த 3 குழந்தைகளும் மருத்துவமனையில் இறந்துவிட்டன.
கருணாநிதி
இந்தக் கூட்டணியும், கூட்டணி ஆட்சியும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கும். உரிமைகளுக்கும் அளித்துள்ள உத்தரவாதத்திலிருந்து ஓர் இழையும் வழுவாது என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லி வருகிறோம்.
வைகோ:
நான் ஒட்டுமொத்தமாக மறுக்கிறேன். நான் உறுதியாக நம்புகிறேன். அடல் பிகாரி வாஜ்பாயின் நிர்வாகம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
சோ. ராமசாமி :
நரேந்திர மோடியின் நீக்கத்தைக் கோருவது முறையல்ல. குஜராத் அரசு மீட்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்யத் துணை நிற்க வேண்டும்.
Author- Ku. Kamaraj
- Pages: 132
Styled With